மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் (அப்பாவை பெற்ற தாய்) அப்பத்தாவின் ஊர் தான் கொம்புக்காரனேந்தல் என்ற ஊர் இது சிவகங்கை சீமையில் அமைந்துள்ளது இந்த ஊர் மருதிருவரின் அப்பத்தா ஊர் என்று அறிந்த பலருக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மூத்த மனைவி பட்டத்தரசி இராக்காத்தாள் அம்மா அவர்களின் ஊரும் இது தான் என்று தெரியாது அதை பற்றி இந்த பதிவில் காண்போம்...!
கொம்புக்காரனேந்தல் மாமன்னர் மருது பாண்டியர்களின் அப்பத்தா ஊராகும் அந்த வகையில் உறவினரான இவ்வூரை சேர்ந்த பெரியதனக்காரரின் மகளான இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்து கொண்டார்...!
ஒரு முறை பெரிய மருது பாண்டியர் கொம்புக்காரனேந்தலுக்கு வந்திருந்தார் இது அவருக்கு தந்தை வழி பாட்டியின் ஊர் என்பதால் கொம்புக்காரனேந்தல் மக்கள் மருதிருவரின் அளவற்ற அன்பும் உரிமையும் கொண்டாடி ''கொம்புக்காரனேந்தல் மருது பாண்டியன்'' என்று பெருமிதத்துடன் நாட்டுப்பாடல் பாடியுள்ளனர் அந்த பாடலின் வரிகள் இதோ...!
''வம்புக் காரர்கள் அத்தனை பேரையும்
வம்பு மரத்திலே சேர்த்தடிக்கும்
கொம்புக்கா ரனேந்தல் மருது பாண்டியன்
கொலுச் சிங்காரத்தைப் பாருங்கடி''
கொம்புக்காரனேந்தல் ஊரைச் சேர்ந்த இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்த பிறகு இராக்காத்தாள் மூலம் பிறந்த குழந்தைகள்...!
1.குடைக்காதுடையார்
2.முத்துச்சாமி
3.உடையணன்
4.முள்ளிக்குட்டி சாமி
குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் கொல்லப்பட்டார் மேலும் முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்கை மரணம் அடைந்தார் இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர் இவ்வூரை சேர்ந்த திரு. ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் ''பெரிய மருது'' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன இராக்காத்தாள் அவர்களின் மூன்றாவது மகன் உடையணனும் நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்...!!!
படத்தில் காண்பது மருது சீமையிலே கொம்புக்காரனேந்தல் மக்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நினைவாக வைத்திருக்கும் நினைவு கல்...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment