Skip to main content

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார் 


தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மாலை பச்சையப்பர் மீது இயற்றியுள்ளார் இன்னும் பல்வேறு பாடல்களும் பலரால் இயற்றபட்டுள்ளது...!!!

இளமைக்காலம்


பச்சையப்ப முதலியார் தாய் வயிற்றில் இருக்கும் போதே இவர் தந்தையார் இறந்துவிட்டார் கணவரையிழந்த பூச்சியம்மாள் தம் பெண்மக்கள் இருவருடன் பெரியபாளையத்திற்குச் சென்று குடியேறிக் குடும்ப நண்பரான ரெட்டி இராயர் என்பாரின் ஆதரவிலிருந்து வருகையில் பச்சையப்பர் பிறந்தார் தம் ஐந்தாம் வயதில் ரெட்டி இராயரையும் இழந்தார் பச்சையப்ப முதலியார் வறுமையில் வாடிய குடும்பம் சென்னைக்கு வந்து குடியேறினர் செல்வரும் வணிகருமான நாராயணப் பிள்ளை என்பவர் இக்குடும்பத்திற்கு ஆதரவு அளித்தார் பச்சையப்ப முதலியார் ஆங்கிலம் எழுதப்படிக்கவும் கணக்கும், வணிக முறையும் சிறப்பாக கற்றார்...!!!

கொடை வள்ளல்



பள்ளியில் படிக்க வேண்டிய பருவத்திலேயே பச்சையப்ப முதலியார் வாழ்க்கைக்கு வழிதேடும் முயற்சியில் ஈடுபட்டார் மொத்த வணிகர்களுக்குச் சரக்கு வாங்கியும் விற்றுக் கொடுக்கும் முகவராக பணியாற்றினார் இத்தொழில் இவர் மொழி பெயர்ப்பாளர் ஆவதற்கு வாய்ப்பளித்தது தம் பதினாறாம் வயதிலேயே கொடை வள்ளலானார் அறப்பணிகளுக்குக் கொடை வழங்கலாயினர் குடும்பப் புரவலர் நாராயணப் பிள்ளையின் செல்வாக்கால் நிக்கலசு என்ற ஏற்றுமதி வணிகருக்கு மொழி பெயர்ப்பாளராக பணிப்பொறுப்பினைப் பெற்றார் சில ஆண்டுகளில் சிறிது செல்வம் திரண்டது தம் தமக்கையின் மகளான அய்யம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்...!!!

வணிகம்


1776 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரிவசூல் செய்தல் நவாப்பின் அலுவலாளர்களுக்குச் சம்பளத்தை ஒப்படைப்பு செய்தல் முதலிய ஒப்பந்த தொழில் மற்றும் ஆங்கில நிறுவனத்தாருக்கு வரவேண்டிய தானிய வரியை (மேல்வாரங்கள்) எனும் தானிய வரியை பணமாக்கித் தரும் குத்தகைத்தொழில், ஆங்கில வணிகர்கட்கும், கருநாடக நவாப்பு அதிகாரிகளுக்கும் இடையேயும் முகவராக இருந்து கொடுக்கல் வாங்கல் செய்தல் முதலிய தொழில்களை மேற்கொண்டார் பச்சையப்ப முதலியார் வரிவசூல் செயலில் இவர் ஆங்கிலேயர்களின் நன்மதிப்பைப் பெற்றார் குறுகிய காலத்திலேயே சென்னை மாகாணத்தின் சிறந்த மொழி பெயர்ப்பாளராக திகழ்ந்தார்...!!!

அரசுப்பணி



தனது 28 ஆவது வயதில் ஆங்கிலேய நிறுவனத்தில் முக்கியப்பதவி வகித்த இராபர்ட் யோசப்பு சலிவன் என்பவரின் முதன்மை மொழி பெயர்ப்பாளராக ஆங்கில அரசுப்பணி ஏற்றார் அதனாலும் பேரும் பெருஞ்செல்வமும் பெற்றார் சலிவனின் அரசியல் அலுவலங்களில் பேருதவிப் புரிந்தார் தஞ்சாவூர் அரசருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் வங்கியராகவும் இருந்து சென்னை மாகாணத்திற்குச் சரியான முறையில் கப்பம் கட்ட துணைப்புரிந்தார் 1784 இல் தஞ்சாவூரில் குடியேறினார் தஞ்சை அரசருக்குச் சென்னை அரசாங்கத்தாரால் தொல்லை நேராமல் காத்தார் அதனால் அரசர் இவரை திவான் போன்று போற்றி பச்சையப்ப முதலியாருக்கு உரிமைகளையும் சிறப்புகளையும் செய்தார்...!!!

சொத்துகள்


பபச்சையப்பன் மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வெண்கல சிலை 


பச்சையப்ப முதலியார் ஈட்டிய பொருள்கள் சொத்துகள் எத்தனை இலகரங்கள் என வரையறுத்து அறியப்படவில்லை இவரே தம் காலத்தில் அறப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவிட்டார் இவர் இறந்தபின் இவர் சுற்றத்தாரும் பேராசைச்காரர் சிலரும் செய்த மோசடிகள் வழக்குகள் முதலியவற்றால் அளவற்ற சொத்துக்கள் மறைந்தன இவர் காலத்திற்கு பின் இவர் பொருளெனக் கண்டறியப்பட்ட தொகை வட்டி முதலுடன் கூடிய தொகை சுமார் எட்டு இலட்சங்கள் ஆகும் இத்தொகையை மூலப்பொருளாகக் கொண்டு பச்சையப்பன் அறநிலைக் காப்பாளர்கள் அறப்பணிகளையும், கல்விப் பணிகளையும் நடத்தி தற்போது வருகின்றனர்...!!!

கல்விப்பணிகள்


பச்சையப்பன் கல்லூரியில் அமைந்துள்ள திருஉருவ சிலை 


கல்வி நிதிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காஞ்சீபுரம், சிதம்பரம், சென்னை இம்மூன்று இடங்களில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும் சென்னையில் கல்லூரி ஒன்றும், காஞ்சியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டு அவைகள் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன...!!!

இறைப்பணிகள்


சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் அமைந்துள்ள பச்சையப்ப முதலியாரின் திருஉருவ சிலை 


பச்சையப்ப முதலியார் மிகுந்த கடவுள் பற்றுடையவர். இவர் செய்த அறப்பணிகள் பல காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ள திருமண மண்டபம் கட்டினார் சிதம்பரத்தில் தேர் செய்து ஆனித் திருமஞ்சனம் என்ற புதிய விழாவைத் தோற்றுவித்தார் காசியிலும் தென்னாட்டில் சென்னை, கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள திருக்கோயில்களுக்கும், பலவகையான கட்டளைகளைத் திட்டஞ்செய்து வைத்தார் பல இடங்களில் அன்னசத்திரங்கள் கட்டினார் சில இடங்களில் அக்கிரகாரம் கட்டினார் இவ்வாறாக இவர் பலப்பல அறப்பணிகளையும் கணக்கில் அடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார்...!!!

இறுதிக்காலம்


1794 பிப்ரவரியில் இவரின் உடல்நிலை மிகவும் சீரற்றது எனவே கும்பகோணத்தில் கட்டத்தொடங்கிய சத்திர வேலையை விரைந்து முடிக்க அங்கு சென்றார் கும்பகோணத்தில் மார்ச் மாதம் 22 நாளில் தம் உயிலை எழுதி முடித்தார் திருவையாற்றில் இறக்க விரும்பி அங்கு விரைந்தார் அதன்படி மார்ச்சு மாதம் 31 ஆம் நாளில் மரணமடைந்தார் இவர் இறப்பிற்கு அடுத்து பழனியாயியும் அடுத்தாற்போல் இவர்களுடைய மகளும் இறந்தனர்...!!!

அகமுடையார் வரலாறு மீட்புகுழு


Comments

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப