Skip to main content

சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் மாயாண்டி சேர்வை


ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் சமயம் மதுரை பகுதியில் இருந்த சமயம் இந்து சமுதாய பெண்கள் வெளியில் செல்லவோ திருவிழாக்களிலோ கலந்து கொள்ளவோ முடியாத சூழல் நிலவிகொண்டிருந்தது மாற்று மதத்தினரால் கடத்தபட்டு கொலை செய்யபடும் நிகழ்வுகள் சாதாரணமாக நடந்தது இதற்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் மாயாண்டி சேர்வை மற்றும் அவரது குழுவினர் அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மாயாண்டி சேர்வை அவர்கள் தேசியவாதியாக இருந்தவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய கொடி ஏற்றபோவதாக ஆங்கிலேயர்களிடம் அறிவித்தார் ஆங்கிலேயர்களும் அவரை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி இருந்தனர் ஆனால் மாயாண்டி சேர்வை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்திலே சில நாட்கள் தங்கி அந்த நாட்களில் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்து சொன்ன தேதியில் தேசிய கொடி ஏற்றிவிட்டார்...!!! 

மாயாண்டி சேர்வை வரைந்த மருதரசர்கள் திருவுருவ படம்...!!! 

மாயாண்டி சேர்வை மிக சிறந்த ஓவியரும் ஆவர் மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் படம் வரைந்தவர் இவரே...!!!

மதுரை இந்து மகாசபை தலைவராக இருந்து இந்துகளுக்கு தொண்டாற்றினார் மேலும் அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் திருமங்கலம் மாயாண்டி சேர்வை அவர்கள் ஆவார் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும் தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார் மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார்...!!! 

மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள மாயாண்டி சேர்வை நினைவிடம்...!!! 

மார்ச் 03 மாயாண்டி சேர்வை அவர்களின் பிறந்தநாளையொட்டி நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மேலும் மாயாண்டி சேர்வை குடும்பத்தினர் மூலம் மதுரை திருமங்கலத்தில் மாயாண்டி சேர்வை நினைவிடத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது...!!! 

மாயாண்டி சேர்வை குடும்பத்தினர்...!!! 

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் பொங்கல் வழிபாடு...!!! 


இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு

 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களி...

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...