 |
மாவீரர் ஜெயராமன் முதலியார்
|
போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்கள் வேலூர் உசூர் பகுதியில் 21.3.1921 ம் வருடத்தில் பிறந்தார் இவர் தனது இளம் வயதிலேயே ஐ.என்.ஏ எனும் இந்திய தேசிய ராணுவப் படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தனது 13 வயதில் அணைக்கட்டு பகுதியில் மவுண்ட் என்ற பள்ளியில் படித்து வந்தார் அந்த நேரத்தில் அப்பகுதியில் தேசிய பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தி பற்றிய பாடல்களை பாடியும் ஜெயராமன் முதலியாருக்கு கற்றும் கொடுத்தனர் அந்த பாடல்களை விரும்பி கற்றுக்கொண்ட ஜெயராமன் முதலியார் தான் படிக்கும் மவுண்ட் பள்ளியில் இந்த பாடலை பாடுகிறார் ஆனால் அந்த பள்ளி ஆங்கிலேயரின் பள்ளி என்பதால் அங்குள்ள ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயராமன் முதலியாரை அடித்தனர் ஜெயராமன் முதலியார் அந்த ஆசிரியரை பதிலுக்கு பதில் அடிக்கு அடி கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டே சென்றுவிடுகிறார் எங்கு தேடியும் கிடைக்காத ஜெயராமன் முதலியார் சில மாதங்களுக்கு பிறகு ஹிட்லரின் ஜெர்மன் படையில் பணியாற்றுவதாக தகவல் கிடைக்கிறது...!!!

அந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய நாட்டின் விடுதலைக்காக ஹிட்லரிடம் உதவி கேட்கிறார் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உங்கள் படையில் உள்ள இந்திய சிப்பாய்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்க அதனை ஏற்ற ஹிட்லர் சுமார் முப்பதாயிரம் வீரர்களை இந்தியா அனுப்புகிறார் அந்த வீரர்கள் இரத்தத்தில் கையெழுத்திட்டு தாய் நாட்டின் விடுதலைக்காக போராட வந்தனர் அதில் ஜெயராமன் முதலியாரும் ஒருவர்...!!!
 |
ஹிட்லர் அளித்த The Italy Star விருது
|
சரியான உணவு உறக்கம் கிடையாது எந்த வகையிலும் வருமானம் கிடையாது உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது இதனை எல்லாம் மனப்பூர்வமாக ஏற்று இரத்தத்தில் கையெழுத்திட்டு நாட்டை காக்க வாருங்கள் என்று கூற அதன்படியே வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் மாவீரர் ஜெயராமன் முதலியார்...!!!
இத்தாலியின் படையில் ஜெயராமன் முதலியார் பணியாற்றிய போது அங்கு நடந்த ஒரு போரில் இவர் பலரை கொன்று குவித்ததால் இத்தாலியன் அரசாங்கம் இவருக்கு ''THE ITALY STAR'' என்ற விருது வழங்கி சிறப்பித்தது ஹிட்லர் அரசாங்கம் மேலும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு தாமரை பட்டையம் விருது அளித்து கெளரவித்தது மேலும் பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு ''நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர்'' எனவும் விடுதலை போராட்ட தியாகி எனவும் கெளரவப்படுத்தினார் மேலும் மாநில அரசு தாமரை பட்டம் விருது வழங்கி சிறப்பித்தது...!!!
 |
நாட்டிற்க்கு உழைத்த விடுதலை வீரர் என்ற விருதை APJ அப்துல்கலாம் வழங்கிய போது
|
 |
மாநில அரசு அளித்த தாமரை பட்டம்
|
 |
மத்திய அரசு அளித்த தாமரை பட்டையம்
|
 |
ஜெயராமன் முதலியாரின் முழு தகவல் மற்றும் அவர் வகித்த பதவிகள்
|
சுதந்திரம் பெற வேண்டி சுமார் 8 ஆண்டுகள் குடும்பத்தினரை பிரிந்து இருந்தார் ஜெயராமன் முதலியார் சுதந்திரத்திற்குப் பிறகும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்த இவர் 2007ம் வருடம் டிசம்பர் 8ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார் நாட்டுக்காக உழைத்து உயிர் நீத்த அகமுடையார் வழித்தோன்றல் ஜெயராமன் முதலியார் புகழ் எட்டுதிக்கும் ஓங்குக...!!!
அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment