Skip to main content

Posts

Showing posts from 2018

திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தின் திறப்பு விழா

பேராசிரியர் ராஜையன்  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நேரடி வாரிசுதார் திருப்பத்தூர் ராமசாமி சேர்வை  சிவகங்கை வரலாற்று ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்  வரலாற்றில் மறைக்கபட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் படுகொலையான திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னுயிர் நீத்த 500 க்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தை உயிர்பிக்கும் வீர வரலாறு தான் திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படம்...!!! திருப்பத்தூர் படுகொலை ஆவணப்படத்தை YouTube வழியே காண https://youtu.be/OpDrspgrHng அக்டோபர் 24 2018 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் அரசு மணி மண்டபத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு மூலம் #திருப்பத்தூர் #படுகொலை ஆவணப்படத்தை பேராசிரியர் ராஜையன் அவர்களின் கைகளால் திறந்து வெற்றிகரமாக இவ்விழா இனிதே நிறைவடைந்தது...!!! ஆயிரம் ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இருந்தும் தள்ளாத வயதில் உள்ள முதியவரான ஐயா ராஜையன் அவர்கள் கைகளால் தான் இந்த திர

HD Photos

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட செம்பு நாணயங்கள்

மருது சீமையான சிவகங்கை சீமையினை 1780-1801 வரை சுமார் 21 ஆண்டுகள் நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் வெளியிட்ட நாணயங்களை பற்றி  இந்த பதிவின் வழியே காணலாம்...!!!  ------------------------------------------------------------------- மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட 3 வகையான நாணயங்கள் பற்றிய ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது அவற்றை 1,2,3 என அந்த நாணயத்தின் படத்துடன் வரிசைப்படி பார்போம்...!!!  1) 09/12/1989 அன்று தினமணி இதழின் நாணயவியல் கட்டுரையாளர் திரு.அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்கள் சிவகங்கை வரலாற்று பேரவை கருத்தரங்கத்தில் மருது பாண்டியர்கள் வெளியிட்ட நாணயத்தினை காட்சிக்கு வைத்து கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளார்...!!! மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு வகையான செம்பு நாணயங்களை வெளியிட்டு உள்ளனர் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் ஒரு கொடி காணப்படுகிறது அந்த கொடியின் உள்ளே ஒரு சூரியனும் ஒரு பிறை சந்திரனும் உள்ளன கொடியின் கீழே நான்கு புள்ளிகள் காணப்படுகிறது...!!!  செம்பு நாணயத்தின் பின் பக்கத்தில்

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்

24 சங்க இலக்கிய நூல்களுக்கு உரைநடை எழுதிய அகமுடையார் வழித்தோன்றல் பெருமழைப் புலவர் சோமசுந்தரனார்  திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள மேலைப் பெருமழை என்றும் சிறிய கிராமத்தில் வேலுத்தேவர்  சிவகாமியம்மாள் தம்பதிக்கு 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் சோமசுந்தரனார் பிறந்தார் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, வெற்றிவேற்கை, நிகண்டுகள், நைடதம், கிருட்டிணன் தூது, அருணாசலப் புராணம் முதலிய நூல்களைக் கற்றார் இவருடைய தந்தையார், தொடர்ந்து மகன் படிப்பதற்கு இடம் தராமல் உழவுத் தொழிலில் ஈடுபடுத்தினார் இருப்பினும் தந்தையாருக்குத் தெரியாமல் கோவில் மடம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள நூல்களைப் பெற்று படித்து வந்தார்...!!!  இவருடைய தாயார் இவரது பத்தாவது வயதில் காலமாகிவிட்டார் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் பின்னர் சோமசுந்தரனார் தமது தாய்மாமன் இல்லத்தில் தங்கினார் இவரது கிராமத்துக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் ‘சர்க்கரைப் புலவர்’ வாழ்ந்து வந்தார் அவரைக் கண்டு தமது கல்வி ஆர்வத்தை வெளிப்படுத்தினார் சர்க்கரைப் புலவர் சோமசுந்தரனா

தமிழ் போராளி பேராசிரியர் இலக்குவனார்

பேராசிரியர் இலக்குவனார்  நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் வாய்மைமேடு என்னும் சிற்றூரில் குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர் இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக சி.இலக்குவனார் அவர்கள் 1909 நவம்பர் 17ம் நாள் அன்று பழந்தமிழ்குடியான அகமுடையார் இனத்தில் பிறந்தார் தமது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்தார்...!!!  ஆரம்பம் கல்வி  வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணை பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணை பள்ளியிலும் பயின்றார் பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல் வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று...!!!  நடுநிலைக் கல்வி தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

சுதந்திர போராட்ட தியாகி சடகோபால தேவர்

போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சுதந்திர போராட்ட தியாகி சடகோபாலத் தேவர்  -------------------------------------------------------------------- அன்பும் அறமும் கொண்ட போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் டெல்டா மண்டலத்தில் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் முத்தையா தேவர் மற்றும் நாகம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாக 1907 ஆம் ஆண்டு நமது சடகோபால தேவர் அவர்கள் பிறந்தார் இவரது இளமைக்காலத்தில் ஆயக்காரன்புலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆய்மூர் என்ற கிராமத்திற்கு சென்றார்...!!! ஆய்மூர் வானம் பார்த்த பூமி எனவே மழையை நம்பிதான் விவசாயம் செய்வார்கள் இந்த நிலையை மாற்ற நினைத்த சடகோபால தேவர் பம்புசெட் முறையை கொண்டுவர அமைச்சர் பக்தவச்சலத்திடம் முறையிட்டு எந்திரப்பாசன முறை மூலம் விவசாயம் செய்யும் முறையை கிராமத்திற்கு கொண்டு வந்தார் ஆய்மூர் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது எனவே அப்போதைய ஆட்சியர் பழனியப்பன் முன்னிலையில் கிராம மக்களை கூட்டி முறையிட்டு அருந்தவம்புலத்திலிருந்து ஆய்மூர் வரை சாலை வசதியை ஏற்படுத்தினார்...!!! புரோகிதர்கள் வைத்து திருமணங்கள் நடைபெற்றால் தான்

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் போரில் நடந்திய ராக்கெட் தாக்குதல்

இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம் இன்று...!!!  ------------------------------------------------------------------- ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புதுப்புது போர் யுக்திகளை கையாண்டனர் அவற்றில் மிக முக்கியமானது இந்த ராக்கெட் தாக்குதல் ஆகும் 25.07.1801 அன்று நடத்த போரில் மருது பாண்டியர்கள் முதல் முறையாக ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தினார்கள்...!!! ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய குறிப்புகளில் சிவகங்கை சீமை போரின் போது ராக்கெட் தாக்குதல் தொடக்கம் பற்றி குறிப்பிடுகையில் "நம் பகைவர் (மருது பாண்டியர்) இன்று (25.07.1801) முதன் முதலாக ராக்கெட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று எழுதியுள்ளார் மேலும் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எரிந்தது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை என்பதையும் கர்னல் வேல்ஸ் தனத

Agamudayar Memes

காளையார் கோவில் காட்டில் மருதரசர்கள் உயிரை காத்த புளியமரம்

காளையார் கோவில் காட்டில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் உயிரை காத்த புளியமரம் : 09/08/1801 அன்று ஆங்கிலேயர்களின் மரம் வெட்டும் குழுவிற்கு மேஜர் ஷெப்பர்டு தலைமை ஏற்றார் அவர்களின் வேகமான முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த ஒரு மேட்டை வசப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இருந்தனர் ஆங்கிலேயர்களால் வசப்படுத்தப்பட்ட அந்த மேட்டை ஒரு இராணுவ நிலையாக அரண் செய்யும்படி ஆங்கிலேயர்களுக்கு உத்தரவு வந்தது அதன்படி கர்னல் இன்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு அணி புறப்பட்டு வந்து வேலையில் ஈடுபட்டது 300 வீரர்களும் 3 பீரங்கிகளும் இருக்கும் அளவிற்கு ஏற்றவாறு மாலை நேரம் வருவதற்குள் தற்காலிகமாக ஒரு கொத்தளம் அமைத்தனர்...!!!  ஆங்கிலேயர்கள் அமைத்த கொத்தளத்தின் தென்பகுதி காளையார் கோவிலை பார்த்து இருந்தது மேலும் அந்த இடத்தில் இருந்து காளையார் கோவிலும் சிறுவயலும் தெளிவாக தெரியும்படி அமைந்திருந்தது அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தை ஆங்கிலேயர்களின் படைகளால் வெட்ட முடியவில்லை இந்த புளிய மரம் தான் மருதரசர்கள் உயிரை காத்தது என்பது குறிப்பிடத்தக்கது...!!!  குண்டடிபட்ட புளிய மரம் : நெருங்கி புடிக்க முடியாததும் வெட

சிவகங்கை சீமை சிவந்த தினம்

ஜீன் 2 தமிழனின் வரலாற்றில் மிக முக்கியமான தினம் சிவகங்கை சீமை சிவந்த தினம் இரத்த சரித்திரம் உருவான தினம்...!!! மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமை மீது போர் தொடுக்க மே 26 1801 அன்று புறப்படுகிறார்கள் அவ்வாறு புறப்பட்ட அவர்களது படைகள் ஜீன் 2 1801 ஆம் நாளன்று மேஜர் கிரே தலைமையில் நாகலாபுரத்திலிருந்து 46 மைல்கள் தூரத்தில் உள்ள மருது சீமைக்குட்பட்ட திருப்புவனத்தை வந்தடைகிறார்கள் அங்கே மருது நாட்டை சேர்ந்த வீரர்கள் முதல் முறையாக ஆங்கிலேயர்களின் கண்களுக்கு தென்படுகிறார்கள்...!!! மருது நாட்டு வீரர்கள் ஆங்கிலேயர்களின் படையில் பின் வரிசையில் வந்த வீரர்களை சுடுகிறார்கள் ஆனால் அதை தவிர ஆங்கிலேயர்களுக்கு வேறு இடைஞ்சல் ஏதுமில்லை மேலும் ஆங்கிலேயர்களின் முகாமிற்கு அருகிலிருந்த வெற்றிலை கொடி காலில் இருந்து இரவு நேரத்தில் நமது மருது நாட்டு வீரர்கள் வெடிகளை வெடித்தார்கள் இதனால் ஆங்கிலேயர்கள் இரவு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனாலும் அவர்க

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அளித்த வெள்ளி தேர்

மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருஞானசம்பந்த பெருமானை ஆவணி மூல வீதிகளில் எழுந்தருளச் செய்வதற்கு மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளி தேர் இன்று 31/05/2018 மீனாட்சி அம்மன் கோயில் வெளியே வீதி உலா வந்தது...!!! இவ்விழாவில் நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்...!!! வெள்ளி தேர் பற்றி முதன் முதலில் குரல் கொடுத்த சைவநெறி மீட்பு பேரவைக்கும் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்திய ஐயா மாரி சேர்வை அவர்களுக்கு நன்றிகள்...!!! இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு

அகமுடையார் குல வள்ளல் காத்தியப்ப தேவர்

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடும் காத்தியப்பத் தேவரின் திருஉருவ படம்...!!!  அகமுடையார் குல வள்ளல் காத்தியப்ப தேவர் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது புதிய முழு உருவ திருஉருவ படத்தை நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...!!! காத்தியப்பத் தேவர் வரலாறு : குடகு மலையில் தோன்றி சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை வளம் கொழிக்க செய்து தன் பயணத்தை நினைவு செய்ய நினைக்கும் காவிரி தாயின் கடைமடையான தஞ்சாவூர் அருகே மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டைக்கு 16 முறை சென்று வந்தால் காசிக்கு ஒரு முறை சென்றதற்கு சமம் என்பார்கள் திருமக்கோட்டைக்கு கிழக்கில் சோழபாண்டிக்கு தெற்கில் அமைந்துள்ள சிற்றூர் கடுக்காகாடு ஆகும் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த சுப்பையா தேவரின் அருமை மகனாகப் பிறந்த கந்தசாமி தேவர் அவர்கள் செல்லத்தம்மாளை மணந்து வியாபார நிமித்தமாக சைகோனில் குடியேறி செல்வசீமானாக வாழ்ந்து வந்தனர்...!!! வாழ்க்கை சுருக்கம் : கந்தசாமி தேவருக்கும் செல்லத்தம்மாளுக்கும் 1879 ஆம் ஆண்டு சைகோன் நகரின் ருவிஸ்டார்ட் என்னுமிடத்தில் உள்ள கந

அகமுடையார் வழித்தோன்றல் நாட்குறிப்பேடு

பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் நூற்றுக்கணக்கான வழித்தோன்றல்கள் உள்ளனர் அதனால் இவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் மேலும் அவர்களின் வாழ்வில் முக்கியமான நாட்களை நினைவு கூற மறந்துவிடுகிறோம் எனவே தற்போது அகமுடையார் வரலாறு மீட்புகுழுவின் முயற்சியால் அகமுடையார் வழித்தோன்றல்களின் நாட்குறிப்பேடு வெளியிடப்படுகிறது...!!! ஜனவரி 3. பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்களின் நினைவு தினம் 10. பெரியவர் சீனிவாச பிள்ளை அவர்களின் பிறந்த தினம் 15. உலகில் தோன்றிய முதல் அகமுடையார் சிவபெருமானின் காவலரான நந்தி தேவருக்கு உகந்த மாட்டு பொங்கல்  17. தேசிய தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் பிறந்த தினம் 16. சோழ தேசத்தின் அகம்படி காவலரான தஞ்சாவூர் பெரியகோட்டை மன்னப்பதேவர் திருவிழா  தைப்பூசம் திருநாள் : அம்மணி அம்மாள் ஜீவமுக்தி அடைந்த தினம் 22. சாத்தப்பன் சேர்வை ஞானியாரால் சிவகங்கை சீமை உருவான தினம் 22/1/1730 23. தியாகி சுந்தர்ராஜன் சேர்வை அவர்களால் சிவகங்கை சீமையில் உலகில் முதன் முறையாக நேதாஜி சிலை நிறுவிய தினம் 23/1/1946 பிப்ரவரி  02. பாகல்பட்டி ஜமீன்தார்

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை

ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் புதிய முழு உருவ திருஉருவ படத்தை அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்...!!! அகமுடையார் வரலாறு மீட்புகுழு