Skip to main content

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட செம்பு நாணயங்கள்


மருது சீமையான சிவகங்கை சீமையினை 1780-1801 வரை சுமார் 21 ஆண்டுகள் நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அவர்களது ஆட்சி காலத்தில் வெளியிட்ட நாணயங்களை பற்றி  இந்த பதிவின் வழியே காணலாம்...!!! 


-------------------------------------------------------------------

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெளியிட்ட 3 வகையான நாணயங்கள் பற்றிய ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது அவற்றை 1,2,3 என அந்த நாணயத்தின் படத்துடன் வரிசைப்படி பார்போம்...!!! 

1) 09/12/1989 அன்று தினமணி இதழின் நாணயவியல் கட்டுரையாளர் திரு.அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்கள் சிவகங்கை வரலாற்று பேரவை கருத்தரங்கத்தில் மருது பாண்டியர்கள் வெளியிட்ட நாணயத்தினை காட்சிக்கு வைத்து கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளார்...!!!

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு வகையான செம்பு நாணயங்களை வெளியிட்டு உள்ளனர் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் ஒரு கொடி காணப்படுகிறது அந்த கொடியின் உள்ளே ஒரு சூரியனும் ஒரு பிறை சந்திரனும் உள்ளன கொடியின் கீழே நான்கு புள்ளிகள் காணப்படுகிறது...!!! 

செம்பு நாணயத்தின் பின் பக்கத்தில் நாணயத்தின் மேலே ''ரு'' என்ற எழுத்தும் அதன் கீழே ''து'' என்ற எழுத்தும் காணப்படுகிறது ''ம'' என்ற எழுத்து நாணயத்தின் பரப்புக்கு வெளியே அச்சு விழுந்ததால் ''ரு'' என்ற எழுத்தும் ''து'' என்ற எழுத்தும் நாணயத்தின் பரப்பில் காணப்படுகிறது இப்பதிவில் படம் 1 என குறிப்பிட்டுள்ள படத்தில் இந்த நாணயத்தினை நாம் காணலாம்...!!! 

Coin Shape : Round 
Material : Copper 
Diameter : 15 Mm
Weight : 1.750 Gms



2) Studies In South Indian Coins என்ற புத்தகத்தில் Coins With The Image Of Marudhu Brothers Of Sivaganga என்ற தலைப்பில் சி.ஆர். ரெங்கசாமி என்பவர் இரண்டு நாணயங்களை வெளியிட்டு காட்சிப்படுத்தி உள்ளார் அந்த நாணயத்தில் மருது பாண்டியர்களின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது...!!! 

நாணயத்தின் முன் பக்கத்தில் இரண்டு நபர்களின் உருவம் உள்ளது என்றும் அதில் முதல் நபரின் வலது கையில் வாளுடனும் இடது கையை உயர்த்தியபடி உள்ளது என்று கூறியுள்ளார் அடுத்ததாக இரண்டாவது நபர் முதல் நபரை விட சிறிது நகர்ந்தும் உயரத்தில் அவரை விட சிறிது குறைவாகவும் கையை மேலே உயர்த்தியபடி உள்ளது என்றும் கூறியுள்ளார் மேலும் நாணயத்தின் உள்ளவர்களின் தலைக்கு மேல் அறைவட்டத்தில் நாணயத்தின் பின் பக்கத்தில் ஒரு சிவ லிங்கமும் அதன் வலது இடது பக்கங்களில் இரண்டு புள்ளிகளும் இருக்கும் இடது பக்கத்தில் உள்ள புள்ளியானது வலது பக்கத்தில் உள்ள புள்ளியை விட பெரிதாக இருக்கும் என்று கூறியுள்ளார் மேலும் சிவலிங்கத்திற்கு கீழே அந்த புள்ளிகளை நோக்கியவாறு கம்பு போன்ற ஒன்று காணப்படுகிறது அது (Slanting Position) ஆக அதாவது சுவற்றில் சாய்த்து வைத்த ஏணியை போன்ற வடிவம் கொண்டது என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் மேலும் இப்பதிவில் படம் 2 என்று குறிப்பிட்டுள்ள படத்தில் இந்த நாணயத்தினை நாம் காணலாம்...!!! 

Coin Shape : Round 
Material : Copper 
Diameter : 15 Mm
Weight : 2.502 Gms



3) Coins With The Image Of Marudhu Brothers Of Sivaganga என்ற தலைப்பில் இரண்டாவது நாணயமாக ஆசிரியர் கூறும் நாணயத்தின் முன் பக்கத்தில் இரண்டு நபர்கள் வலது பக்கம் பார்த்து நிற்பது போன்றும் அவர்களது கையை நீட்டியுள்ளவாறும் இடது பக்கம் உள்ள நபரின் வலது கையில் வளரி வைத்துள்ளவாறும் அவரின் இடது கையை சிறிது உயர்த்தியபடியும் உள்ளது என்று கூறியுள்ளார் மேலும் இந்த நாணயத்தின் இரண்டு நபர்களுக்கும் இடையில் நிழல் விழுமாறு அமைந்துள்ளது என்றும் புள்ளி வைத்த வரிசை உள்ளது என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்...!!! 

நாணயத்தின் பின் பக்கத்தில் சிவலிங்கமும் அதனை சுற்றி புள்ளி வைத்த வட்டமும் 80% நாணயத்தின் அளவில் அமைந்துள்ளது என்று ஆசிரியர் கூறியுள்ளார் மேலும் இப்பதிவில் படம் 3 என்று குறிப்பிட்டுள்ள படத்தில் நாணயத்தினை நாம் காணலாம்...!!! 

Coin Shape : Round 
Material : Copper 
Diameter : 15 Mm
Weight :  3.128 Gms



பொதுவாக சிவகங்கை மன்னர்களினால் வெளியிடப்பட்ட 16 நாணயங்களிலும் சிவலிங்கம், சூரியன், சந்திரன், விநாயகர்,மயில்,சிங்கம்,சரஸ்வதி போன்றவை இடம் பெற்றுள்ளது என ஆய்வாளர் K.கனேசன் அவர்கள் எழுதிய Coins Of Tamilnadu என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது...!!! 

21 ஆண்டுகள் சிவகங்கை சமஸ்தானத்தை நல்லாட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் புகழ் எட்டுதிக்கும் ஓங்குக...!!! 

இந்த வரலாற்று பொக்கீஷத்தை அறிய உதவியாக இருந்த மதிப்பிற்குரிய அண்ணன் நாணயவியல் ஆய்வாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்களுக்கு நன்றிகள்...!!! 

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

Comments

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களி...