Skip to main content

சுதந்திர போராட்ட தியாகி சடகோபால தேவர்


போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் சுதந்திர போராட்ட தியாகி சடகோபாலத் தேவர் 


--------------------------------------------------------------------

அன்பும் அறமும் கொண்ட போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் டெல்டா மண்டலத்தில் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் முத்தையா தேவர் மற்றும் நாகம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாக 1907 ஆம் ஆண்டு நமது சடகோபால தேவர் அவர்கள் பிறந்தார் இவரது இளமைக்காலத்தில் ஆயக்காரன்புலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆய்மூர் என்ற கிராமத்திற்கு சென்றார்...!!!

ஆய்மூர் வானம் பார்த்த பூமி எனவே மழையை நம்பிதான் விவசாயம் செய்வார்கள் இந்த நிலையை மாற்ற நினைத்த சடகோபால தேவர் பம்புசெட் முறையை கொண்டுவர அமைச்சர் பக்தவச்சலத்திடம் முறையிட்டு எந்திரப்பாசன முறை மூலம் விவசாயம் செய்யும் முறையை கிராமத்திற்கு கொண்டு வந்தார் ஆய்மூர் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது எனவே அப்போதைய ஆட்சியர் பழனியப்பன் முன்னிலையில் கிராம மக்களை கூட்டி முறையிட்டு அருந்தவம்புலத்திலிருந்து ஆய்மூர் வரை சாலை வசதியை ஏற்படுத்தினார்...!!!

புரோகிதர்கள் வைத்து திருமணங்கள் நடைபெற்றால் தான் அவர்கள் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று இருந்த அக்காலத்திலே தலைவர்களை வைத்து திருமணம் செய்யும் சுயமரியாதை திருமண முறையை அவர்கள் திருமணத்திலேயே கடைபிடித்து அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்கள் மேலும் ஆய்மூரில் இருந்த அரசு  நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப்பள்ளியாக மாற்ற கடுமையாக முயற்ச்சித்து நிறைவேற்றினார்...!!!

அந்நிய பொருள்களை புறக்கணித்து கதர் ஆடைகளையே தன் வாழ்நாள் முழுவதும் அணிந்தவர் சடகோபால தேவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார் மேலும் காந்தி முன்னெடுத்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் தமிழகத்தில் இராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடைபயணம் மேற்க்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுத்தனர் அதில் சர்தார் வேதரத்தினம் உடன் ஆய்மூர் சடகோபாலத்தேவர் மற்றும் திருத்துறைப்பூண்டி தியாகி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்...!!!

பல்வேறு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்று வந்ததால் அரசாங்கத்தால் தொண்டியக்காட்டில் வழங்கப்பட்ட ஏழு ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கே தானமாக வழங்கினார்...!!!

தனது தாய் நாட்டின் விடுதலைக்காக தான் போராடினேன் அதற்கு ஈடாக எந்த சலுகையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார் பூமிதான இயக்கத்தில் (சர்வோதய திட்டம்) தமது நிலத்தை ஏழைகளுக்கு அளித்தார்...!!!

ஆய்மூர் பசுபதீஸ்வரர் கோயில் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது அதை சீர்செய்து குடமுழுக்கு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார் மேலும் புதிதாக இராம மடம் ஒன்றை மடத்தையா திரு.கலிதீர்த்தாத் தேவர் அவர்களின் உதவியுடன்  ஏற்படுத்தினார் அக்கோவில் விழாக்களை எல்லாம் விவசாயம் இல்லாத கோடைகாலத்தில் விழாக்களை நடத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்...!!!

இவர் 2003 ஆம் ஆண்டு  மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட  அக்டோபர் 24 அன்று தனது 97 ஆவது வயதில் காலமானார்..!!!

வரலாறு படிப்போம்...!!!

வரலாறு படைப்போம்...!!!

அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

Comments

Post a Comment

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களி...