காளையார் கோவில் காட்டில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் உயிரை காத்த புளியமரம் :
09/08/1801 அன்று ஆங்கிலேயர்களின் மரம் வெட்டும் குழுவிற்கு மேஜர் ஷெப்பர்டு தலைமை ஏற்றார் அவர்களின் வேகமான முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த ஒரு மேட்டை வசப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இருந்தனர் ஆங்கிலேயர்களால் வசப்படுத்தப்பட்ட அந்த மேட்டை ஒரு இராணுவ நிலையாக அரண் செய்யும்படி ஆங்கிலேயர்களுக்கு உத்தரவு வந்தது அதன்படி கர்னல் இன்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு அணி புறப்பட்டு வந்து வேலையில் ஈடுபட்டது 300 வீரர்களும் 3 பீரங்கிகளும் இருக்கும் அளவிற்கு ஏற்றவாறு மாலை நேரம் வருவதற்குள் தற்காலிகமாக ஒரு கொத்தளம் அமைத்தனர்...!!!
ஆங்கிலேயர்கள் அமைத்த கொத்தளத்தின் தென்பகுதி காளையார் கோவிலை பார்த்து இருந்தது மேலும் அந்த இடத்தில் இருந்து காளையார் கோவிலும் சிறுவயலும் தெளிவாக தெரியும்படி அமைந்திருந்தது அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தை ஆங்கிலேயர்களின் படைகளால் வெட்ட முடியவில்லை இந்த புளிய மரம் தான் மருதரசர்கள் உயிரை காத்தது என்பது குறிப்பிடத்தக்கது...!!!
குண்டடிபட்ட புளிய மரம் :
நெருங்கி புடிக்க முடியாததும் வெட்டி சாய்க்க முடியாததுமான அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றது அந்த புளியமரம் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போரிடும் சமயத்தில் பீரங்கியால் மருதரசர் மார்பை குறிபார்த்து சுட்டான் ஒரு வெள்ளையன் மருதரசர் மார்பில் பட வேண்டிய அந்த குண்டு தெய்வாதீனமாக தப்பிவிட்டது தங்கள் நாட்டு மன்னர்கள் மருதரசர் மார்பை துளைக்க வந்த குண்டை தன் மீது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டது தலைசிறந்த தமிழ் வீரனை போல ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்ற அந்த புளியமரம் பீரங்கி குண்டு அந்த புளியமரத்தின் மீது பாய்ந்து துளையிட்டு வெளியே சென்றது ஆயினும் மருதரசர் உயிர் காத்த புளியமரம் சாயவில்லை...!!!
(மருதரசர் உயிரை காக்க குண்டடிபட்ட காளையார் கோவில் காட்டில் இருந்த புளியமரம் சரியான முறையில் பாதுகாக்கப்படாததால் அந்த வரலாற்று சின்னம் இன்றில்லை)
ஆதாரங்கள் :
* ஆங்கிலேய அதிகாரி கர்னல் வேல்ஸ் எழுதிய எனது இராணுவ நினைவுகள்
* புகைப்படம் உதவி ந.சஞ்சீவி அவர்களின் மானங்காத்த மருது பாண்டியர்கள் புத்தகம்
* மீ.மனோகரன் அவர்கள் எழுதிய மருது பாண்டிய மன்னர்கள் புத்தகம்
Comments
Post a Comment