அகமுடையார் வழித்தோன்றல் மிராசுதார் பெரியவர் எம்.ஆர்.சீனிவாசப்பிள்ளை (அகமுடையார்)
தோற்றம் : 10.01.1915
மறைவு : 08.07.1986
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா மண்ணுக்குமுண்டானில் மிராசுதார் ராஜகோபால் பிள்ளையின் செல்வபுதல்வராக அவதரித்தவர் தான் சீனிவாசப்பிள்ளை அகமுடையார் இவர் திருக்களார் அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில் மடத்தினை திறம்பட செயல்படுத்தியவர் மேலும் செந்தாமரைக்கண் தேவதானம் கிராமத்தின் முந்தைய V.H.M (Village Head Municip) ஆகவும் திறம்பட செயலாற்றியவர்...!!!
ராஜ மன்னார்குடி ராஜ கோபால சுவாமி அகமுடையார் மண்டகபடி தங்க சூரிய பிரபை வாகனம் |
புகழ்பெற்ற மன்னார்குடி பெரியகோயில் என்று போற்றட்டும் ஸ்ரீ ராஜபாலசுவாமி திருக்கோயிலில் 1923 ம் வருடத்திலிருந்து நீண்ட பாரம்பரியத்துடன் வெகு சிறப்பாக அகமுடையார் இனக்குழு உறவுகளால் இன்றளவும் நடத்தப்படும் #தங்கசூரியபிரபை மன்டகபடி எனும் தங்கசூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீராஜகோபால சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலிக்கும் விழாவினை 1970 லிருந்து தன் வாழ்நாளின் இறுதி நாள் வரை 1986 வரை தலைமை ஏற்று சிறப்புடனே நடத்தி அதனை புகழ்படுத்திய பெருமைக்குரியவர் மணிமேகலை நடுநிலைப்பள்ளியை மன்னார்குடியில் துவக்கி ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி சேவையும் செய்தவர்...!!!
தகவல் உதவி
மா.புருசோத்தமன் சொக்கனாவூர்
Comments
Post a Comment