தமிழக அரசியல் வரலாற்றில் நீதிக்கட்சியை உருவாக்கிய அகமுடையார் வழித்தோன்றல் நடேசன் முதலியார்...!!!
டாக்டர் நடேசன் முதலியார் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராவார் சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்...!!!
இவர் பிராமணரல்லாத ஜாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார் பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது அரசியலில் பங்கேற்காமல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நடத்தி வந்தது...!!!
![]() |
டாக்டர் நடேசன் முதலியார் |
நடேசன் முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி.எம்.நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார் இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது நடேசன் முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்...!!!
1921 இல் சென்னை மாகாணத்தில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற பங்கிங்காம் கர்நாடிக் ஆலை வேலைநிறுத்தத்தை (புளியந்தோப்பு கலவரங்கள்) முடிவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கும் தியாகராய செட்டிக்கும் பெரும்பங்கு உண்டு நடேச முதலியார் 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்னை சட்டமன்ற உறுப்பினரானார்...!!!
![]() |
சென்னையில் நடேசன் முதலியார் பெயரில் அமைந்துள்ள சாலை...!!! |
![]() |
![]() |
அகமுடையார் வழித்தோன்றல் டாக்டர் நடேசன் முதலியார் அவர்களின் நினைவாக அமைந்துள்ள பூங்கா...!!! |
ஆதித் திராவிடர் நலனில் டாக்டர் நடேசனாரை விடத் தீவிரமாகப் பாடுபட்டவர்கள் எவரும் இலர் மகாத்மா காந்தியின் “ஹரிஜன் இயக்கம்” தொடங்கு வதற்கு முன்பே டாக்டர் நடேசன் முதலியார் ஆதித் திராவிடர் நலனில் மிக மிக அக்கறை கொண்டிருந்தார்...!!!
![]() |
பூங்காவில் அமைந்துள்ள நடேசன் முதலியார் அவர்களின் திருஉருவ சிலை...!!! |
நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறிது காலம் சுப்பராயனின் ஆதரவாளராக இருந்தார் நீதிக்கட்சி பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்டிருந்தாலும் கட்சியில் பிராமணர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடேச முதலியார் கருதினார் இதற்காக 1929 இல் நீதிக்கட்சி மாநாட்டில் அவர் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது (பின்னர் 1934 முதல் பிராமணர்கள் உறுப்பினர்களாக இருந்த தடை நீக்கப்பட்டது) 1937 வரை சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்த நடேச முதலியார் பெப்ரவரி 18 1937 இல் மரணமடைந்தார்...!!!
![]() |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது...!!! |
மேலும் சென்னையில் இவரது பெயரில் ஒரு சாலை அமைந்துள்ளது தி.நகர் பகுதியில் நடேசன் பூங்காவில் இவரது திருஉருவ சிலையும் அமைந்துள்ளது நடேசன் முதலியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் தஞ்சை சேர்ந்த சின்னையா அவர்கள் நடேசன் முதலியார் திருவுருவசிலை சிலைக்கு மரியாதை செலுத்தினார் மேலும் புதிய நீதிக் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினார்கள்...!!!
![]() |
அகமுடையார் குல மாணிக்கம் நீதிக்கட்சியின் நிறுவனர், சமுக நீதியின் தந்தை, திராவிட இயக்க அரசர், இந்தியாவில் முதல் தொழிற்சங்கத்தை ஏற்படுத்திவர், இந்து அறநிலை துறை பாதுகாவலர் மற்றும் மருத்துவரான நடேசன் முதலியார் அவர்களின் 81வது நினைவு தினத்தில் ஐயாவுக்கு புகழ் வணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது...!!!
Comments
Post a Comment