Skip to main content

டாக்டர் நடேசன் முதலியார்


தமிழக அரசியல் வரலாற்றில் நீதிக்கட்சியை உருவாக்கிய அகமுடையார் வழித்தோன்றல் நடேசன் முதலியார்...!!!

டாக்டர் நடேசன் முதலியார் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராவார் சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்...!!!

இவர் பிராமணரல்லாத ஜாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார் பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது அரசியலில் பங்கேற்காமல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நடத்தி வந்தது...!!!

டாக்டர் நடேசன் முதலியார் 

நடேசன் முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி.எம்.நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார் இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது நடேசன் முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்...!!!

1921 இல் சென்னை மாகாணத்தில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற பங்கிங்காம் கர்நாடிக் ஆலை வேலைநிறுத்தத்தை (புளியந்தோப்பு கலவரங்கள்) முடிவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கும் தியாகராய செட்டிக்கும் பெரும்பங்கு உண்டு நடேச முதலியார் 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்னை சட்டமன்ற உறுப்பினரானார்...!!!

சென்னையில் நடேசன் முதலியார் பெயரில் அமைந்துள்ள சாலை...!!!



அகமுடையார் வழித்தோன்றல் டாக்டர் நடேசன் முதலியார் அவர்களின் நினைவாக அமைந்துள்ள பூங்கா...!!!

ஆதித் திராவிடர் நலனில் டாக்டர் நடேசனாரை விடத் தீவிரமாகப் பாடுபட்டவர்கள் எவரும் இலர் மகாத்மா காந்தியின் “ஹரிஜன் இயக்கம்” தொடங்கு வதற்கு முன்பே டாக்டர் நடேசன் முதலியார் ஆதித் திராவிடர் நலனில் மிக மிக அக்கறை கொண்டிருந்தார்...!!!

பூங்காவில் அமைந்துள்ள நடேசன் முதலியார் அவர்களின் திருஉருவ சிலை...!!! 

நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறிது காலம் சுப்பராயனின் ஆதரவாளராக இருந்தார் நீதிக்கட்சி பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்டிருந்தாலும் கட்சியில் பிராமணர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடேச முதலியார் கருதினார் இதற்காக 1929 இல் நீதிக்கட்சி மாநாட்டில் அவர் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது (பின்னர் 1934 முதல் பிராமணர்கள் உறுப்பினர்களாக இருந்த தடை நீக்கப்பட்டது) 1937 வரை சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்த நடேச முதலியார் பெப்ரவரி 18 1937 இல் மரணமடைந்தார்...!!!

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது...!!! 

மேலும் சென்னையில் இவரது பெயரில் ஒரு சாலை அமைந்துள்ளது தி.நகர் பகுதியில் நடேசன் பூங்காவில் இவரது திருஉருவ சிலையும் அமைந்துள்ளது நடேசன் முதலியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் தஞ்சை சேர்ந்த சின்னையா அவர்கள் நடேசன் முதலியார் திருவுருவசிலை சிலைக்கு மரியாதை செலுத்தினார் மேலும் புதிய நீதிக் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினார்கள்...!!!



அகமுடையார் குல மாணிக்கம் நீதிக்கட்சியின் நிறுவனர், சமுக நீதியின் தந்தை, திராவிட இயக்க அரசர், இந்தியாவில் முதல் தொழிற்சங்கத்தை ஏற்படுத்திவர், இந்து அறநிலை துறை பாதுகாவலர் மற்றும் மருத்துவரான நடேசன் முதலியார் அவர்களின் 81வது நினைவு தினத்தில் ஐயாவுக்கு புகழ் வணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது...!!! 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களின் ப

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தின மா