Skip to main content

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 77 வது ஜெயந்தி விழா


ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் 77 வது ஜெயந்தி விழா முதன் முறையாக அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மூலம் தஞ்சாவூர் கரந்தையில் கொண்டாடப்பட்டது உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது...!!!


ஆங்கிலேயரின் ஆதிக்கம் இருந்த காலமான 1919 லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டுமென முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் உமா மகேசுவரன் பிள்ளை ஆவார் மேலும் அகமுடையார் பேரினத்தின் நலன் கருதி அகமுடையார்கென முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண அகமுடையார் மகாசன சங்கம் உருவாக முக்கிய காரணகர்த்தா ஆவார் இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் சுவரொட்டி தயார் செய்து அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்டது...!!!


மே 7 உமா மகேசுவரன் பிள்ளை பிறந்த தினத்தன்று தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! 



உமா மகேசுவரன் பிள்ளை உதித்த நல்ல நாளில்  அவரது கொள்கைகளை நினைவு கூர்ந்து குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதுரையில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் பென்சில் பேனா போன்றவை வழங்கப்பட்டது...!!! 




அதனை தொடர்ந்து மே 9 தமிழவேள் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தன்று கரந்தை தமிழ் சங்கத்தில் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் புதிய முழு உருவ திருஉருவ படம் திறப்பு விழா ஏற்பாடுகள் நமது குழு இளைஞர்கள் மூலம் செய்யப்பட்டது காலை ஐயாவின் திருஉருவ சிலையை தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்தி அதன் பின்னர் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது...!!!





உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் திருஉருவ படம் ஐயா கரத்தை ராமநாதன் அவர்களின் கைகளால் திறந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை, ராமநாதபுரம், பழநி, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து உறவுகள் கலந்து கொண்டனர்...!!! 






அதனை தொடர்ந்து விழாவுக்கு வந்த உறவுகளுக்கு நீர், மோர், தண்ணீர் பழம் போன்றவை வழங்கப்பட்டது பின்னர் நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது...!!! 






தற்பொழுது ஐயா தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் திருஉருவ படமானது கரந்தை தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும் அகமுடையார் இனத்திற்காகவும் உழைத்து உயிர் நீத்த உத்தம தலைவரை  இனி வரும் காலங்களில் நினைவு கூர்ந்து வணங்குவாம்...!!! 


கரந்தை ஜெயந்தி விழாவை சிறப்புற நடத்த உதவியாக இருந்த உறவுகளுக்கும் மேலும் கரந்தை தமிழ் சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து அகமுடையார் ஒற்றுமையை நிலைநாட்டிய அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் கோடாண கோடி நன்றிகள்...!!! 


Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்

கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய போர்க்குடி அகமுடையார்கள்  ----------------------------------------------------- பழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி ஆயுதத்தை 217 ஆண்டுகளுக்கு முன்பு போர்களங்களில் பயன்படுத்திய பெருமைக்குரியவர்கள் நமது சிவகங்கை சீமையின் மன்னர்கள் மருது பாண்டியர்கள் என்பது நாம் அறிந்த செய்தி ஆனால் அகமுடையார்கள் கி.பி 1500 களிலேயே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...!!! ஆம் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1500 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் சகோதர்கள் இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது இதுவே வளரி பற்றி தமிழகத்தில் கிடைத்துள்ள ஒரே பழமையான சிற்பம் ஆகும் இந்த நடுகல்லில் காணப்படுபவர்கள் திரு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னோர்களே ஆவார்கள் இந்நடுகல் பற்றியச் செய்தியை இவர் தனது “வடகரை-ஒர் வம்சத்தின் வரலாறு” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்...!!! மேலும் குறிப்பிட்ட இந்த சகோதரர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஆயுதம் மேற்குறிப்பிட்டவர்களி...