Skip to main content

31 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்ட மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண்

மாவீரர் மலேயா கணபதி 

டிசம்பர் 29 /12 /2017 தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது சில மாதங்களுக்கு முன்பு ரஜினி நடித்து வெளிவந்த கபாலி திரைப்படத்தின் கதை மலேயா கணபதியின் வீர வரலாறு என்பது அனைவரும் அறிந்ததே மலேயாவில் ஏழை எளிய தொழிலாளர்களின் இழிநிலையை கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைத்தவராவார் மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைந்த போது நேதாஜியின் அழைப்பை ஏற்று மலேயா கணபதி INA படையில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக பணியாற்றினார்...!!!

மலேயாவில் வாழ்ந்த அனைத்து இன தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி வலிமை வாய்ந்த ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார் அதன் மூலம் பல போராட்டங்களைச் செய்து வெள்ளை முதலாளிக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் அவரின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து அப்போது மலேயாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசால் மலேயா கணபதி கைது செய்யப்பட்டு 04/05/1949 அன்று தூக்கிலிடப்பட்டார்...!!!

தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண்  

அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது 

31  ஆண்டுகளுக்கு முன்பு தம்பிக்கோட்டையில் மலேயா கணபதிக்கு வைத்த நினைவு தூணின் கல்வெட்டு

 31 வருடங்களுக்கு முன்பே தஞ்சாவூர் தம்பிக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் பற்றி இப்பதிவில் காண்போம் கடந்த 29/12/2017 அன்று தம்பிக்கோட்டையில் மாவீரர் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது இது அனைவரும் அறிந்ததே ஆகும்...!!! 

ஆனால் 6/7/1986 ஆம் ஆண்டே தம்பிக்கோட்டையில் அவருக்காக நினைவு தூண் வைத்துவிட்டனர் அந்த பகுதியில் ECR ரோடு வருவதின் காரணமாக வேறு வழியின்றி அந்த நினைவு தூணை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அப்போது இருந்த அரசாங்கத்தின் மூலம் அந்த தூண் இடிக்கப்பட்டு சாலை கொண்டு வரப்பட்டது அப்போது அந்த ஊரில் வசித்த ஒருவரின் (பெயர் தெரியவில்லை) முயற்சியால் திறப்பு விழா செய்யப்பட்ட கல்வெட்டு மட்டும் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் பாதுகாத்து தற்போது 2017 ஆம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்ட நினைவு தூணில் புதிய மற்றும் பழைய கல்வெட்டையும் பதித்து உள்ளனர்...!!!

கல்வெட்டை பாதுகாத்த அந்த நபருக்கு இந்த நேரத்தில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...!!!

புதிய மற்றும் பழைய கல்வெட்டு

இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...