Skip to main content

கொம்புக்காரனேந்தல் என்ற ஊருக்கும் மருது பாண்டியர்களுக்கும் உண்டான தொடர்பு


மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் (அப்பாவை பெற்ற தாய்) அப்பத்தாவின் ஊர் தான் கொம்புக்காரனேந்தல் என்ற ஊர் இது சிவகங்கை சீமையில் அமைந்துள்ளது இந்த ஊர் மருதிருவரின் அப்பத்தா ஊர் என்று அறிந்த பலருக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மூத்த மனைவி பட்டத்தரசி  இராக்காத்தாள் அம்மா அவர்களின் ஊரும் இது தான் என்று தெரியாது அதை பற்றி இந்த பதிவில் காண்போம்...!

கொம்புக்காரனேந்தல் மாமன்னர் மருது பாண்டியர்களின் அப்பத்தா ஊராகும் அந்த வகையில் உறவினரான இவ்வூரை சேர்ந்த பெரியதனக்காரரின் மகளான இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்து கொண்டார்...!

ஒரு முறை பெரிய மருது பாண்டியர் கொம்புக்காரனேந்தலுக்கு வந்திருந்தார் இது அவருக்கு தந்தை வழி பாட்டியின் ஊர் என்பதால் கொம்புக்காரனேந்தல் மக்கள் மருதிருவரின் அளவற்ற அன்பும் உரிமையும் கொண்டாடி ''கொம்புக்காரனேந்தல் மருது பாண்டியன்'' என்று பெருமிதத்துடன் நாட்டுப்பாடல் பாடியுள்ளனர் அந்த பாடலின் வரிகள் இதோ...!

''வம்புக் காரர்கள் அத்தனை பேரையும்
வம்பு மரத்திலே சேர்த்தடிக்கும்
கொம்புக்கா ரனேந்தல் மருது பாண்டியன்
கொலுச் சிங்காரத்தைப் பாருங்கடி''

கொம்புக்காரனேந்தல் ஊரைச் சேர்ந்த இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்த பிறகு இராக்காத்தாள் மூலம் பிறந்த குழந்தைகள்...!

1.குடைக்காதுடையார்
2.முத்துச்சாமி
3.உடையணன்
4.முள்ளிக்குட்டி சாமி

குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் கொல்லப்பட்டார் மேலும் முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்கை மரணம் அடைந்தார் இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர் இவ்வூரை சேர்ந்த திரு. ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் ''பெரிய மருது'' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன இராக்காத்தாள் அவர்களின் மூன்றாவது மகன் உடையணனும் நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்...!!!

படத்தில் காண்பது மருது சீமையிலே கொம்புக்காரனேந்தல் மக்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நினைவாக வைத்திருக்கும் நினைவு கல்...!!!

இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...