Skip to main content

அகமுடையார் வழித்தோன்றல்கள் நினைவிடங்களுக்கு ஒரு பயணம்

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை 

முதற் இடை கடை சங்கங்களின் அழிவிற்கு பின்னர் ஐந்தாம் தமிழ் சங்கத்தினை தஞ்சையில் உருவாக்கி தமிழை வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை மேலும் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையார் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதாவது BC பட்டியலில் இணைத்த உத்தம தலைவர் இவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!! 
பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் 

தமிழ்நாட்டின் நேதாஜி என்று அழைக்கப்படும் அகமுடையார் வழித்தோன்றல் பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக அயராது உழைத்து உயிர் நீத்த மாவீரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வாட்டாக்குடி இரணியன் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!! 
பெரியகோட்டை மன்னப்பதேவர் ஆலயம்

சோழர்களின் ஆட்சிக்கு பிறகு மராட்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தஞ்சை பகுதி அரசர்களின் கோட்டை கொத்தளங்களை காவல் காக்கும் தொழில் முறையை செய்து வந்து இன்று காவல் தெய்வமாக விளங்கும் அகமுடையார் வழித்தோன்றல் பெரியகோட்டை மன்னப்பதேவருக்கு அவரது 38 வகையறா இணைந்து கோவில் எழுப்பி முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு கன்னிப்பொங்கல் அன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்...!!! 

மன்னப்பதேவர் குட்டை

பெரியகோட்டை மன்னப்பதேவருக்கு சொந்தமான அவரது பெயரில் அமைந்துள்ள மன்னப்பதேவர் குட்டை இன்று இது ஊருக்கு பொதுவாக உள்ளது வருடம் ஒரு முறை குத்தகை விடப்படுகிறது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் இணைந்து மன்னப்பங்குட்டையை பார்வையிட்ட போது...!!! 
மன்னப்பதேவர் ஆலயம் முன்பு அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் 

பெரியகோட்டை மன்னப்பதேவர் வாரிசுதார்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்த போது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மன்னப்பதேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம் இனியும் தொடர்ந்து அகமுடையார் வழித்தோன்றல்கள் வரலாற்றை மீட்டெடுப்போம் அனைவரும் ஆதரவு தாருங்கள்...!!! 

இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...