Skip to main content

அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர்



அகமுடையார் வழித்தோன்றல் தேசியத்தலைவர் ஐயா ஏ ஆர் பெருமாள் தேவர் அவர்கள் அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.1.1921 ஆம் ஆண்டு பிறந்தார்...!!!

பெருமாள் தேவர் அவர்கள் ''அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்'' கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் இன்றைக்கு எத்தனையோ நூல்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம் ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் அகமுடையார் வழித்தோன்றல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் ஆவார் அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது முதன் முறையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர் இவரே தனது 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முதல் சிஷ்யன் ஆவார் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்...!!!

1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார் அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ''ஜே'' என்று கூறுவது வழக்கம் கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின் தொடர்ந்து வர சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை ராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் அந்த சிறுவன் அந்த சிறுவனே பின்னாளில் (அருப்புக்கோட்டை ராமுத்தேவர் பெருமாள்) எ.ஆர்.பெருமாள் என அழைக்கப்பட்டார்...!!!

பசும்பொன் தேவர் தனது சொத்துக்களை 16 பங்குகளாக பிரித்து உயில் எழுதினார் அதில் முதல் பங்கு மற்றும் பெரும் பங்கை தனது சிஷ்யனான ஏ ஆர் பெருமாள் தேவர் அவர்களுக்கு வழங்கினார் அந்த அளவுக்கு தேவரின் நம்பிக்கைக்குரியவராய் விழங்கினார் அச்சொத்துகளை அவர் தேவர் பெயரில் இயங்கும் தரும ஸ்தாபனம் ஒன்றை நிறுவி இனைத்து விட்டார் மேலும் தேவர் அவர்கள் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்ததில் 12 பேர் அந்த சொத்துக்களை ஸ்தாபனத்தில் இனைத்து விட்டனர் முத்துராமலிங்க தேவரின் மறைவிற்கு பின் கட்சியை வலுப்படுத்த பாண்டி மண்டலத்தின் குக்கிராமங்கள் வரை சென்று பசும்பொன் தேவரின் புகழ் பரப்பினார்...!!!

முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகுளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவரோடு இனைந்து பணியாற்றினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இனக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவிக்கவும் சிவகங்கை மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்...!!!

அருப்புக்கோட்டை பெரிய தெரு பதினெட்டு தலைக்கட்டு அகம்படியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அகம்படியர் மஹாலில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர் மேலும் தேவரின் வெண்கலச்சிலையை மஹாலில் திறந்து வைத்தார் இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே புல்லட் புரூப் பாதுகாப்புடன் காணப்படும் ஒரே தேவர் சிலை ஏ ஆர் பெருமாள் தேவர் நிறுவிய சிலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது பசும்பொன் தேவர் பெயரில் திருமண மண்டபம் ஒன்றினையும் கட்டினார்...!!!

பசும்பொன் தேவர் அவர்களுடன் பணியாற்றியதில் தனது வாழ்வில் எந்த ஒரு இடத்திலும் தனது ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தாத ஒருவர் ஏ.ஆர் பெருமாள் தேவர் ஆவார் வாழ்வின் இறுதி வரை பசும்பொன் தேவர் புகழ் பாடும் சிஷ்யனாகவும் அனைவரிடமும் அன்புகாட்டி எளிமையை விரும்பினார் பெருமாள் தேவர் அவர்களுக்கு முன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர் உடல் நலக்குறைவின் காரணமாக 21.4.1998 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்...!!!

இத்தகைய பெரும் புகழ் கொண்ட தேசிய தலைவர் பெருமாள் தேவரின் வரலாற்றை எமது அகமுடையார் இனமும் மறந்தது மேலும் இன்று வரை திட்டமிட்டு அவரது புகழ் மறைக்கபப்டுகிறது...!!!

அகமுடையார் வரலாறு மீட்புகுழு 

Comments

Popular posts from this blog

மாவீரர் கருப்பு சேர்வை 213 வது வீரவணக்க நாள்

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!! தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!! அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!! மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு (தமிழ்நாடு)

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்

கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார்  தமிழகம் கடையேழு வள்ளல்களை கண்டிருக்கிறது அவர்களுக்கு பிறகு கண்ட வள்ளலே அகமுடையார் வழித்தோன்றல் பச்சையப்ப முதலியார் ஆவார் இவர் சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் காஞ்சி விசுவநாத முதலியார் தாயார் பூச்சியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காவும் இறை பணிக்காவும் ஏழைகளுக்காவும் செலவிட்ட வள்ளல் ஆவார் தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது மேலும் கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார் இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன மேலும் 28 கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன மேலும் காஞ்சி சபாபதி முதலியார் பச்சையப்ப முதலியார் நீதி மாலை மற்றும் பொன் மாலை இயற்றியுள்ளார் இராமனுஜ கவிராயர் பஞ்சரத்தி...

மழை வெள்ளத்தால் நிரம்பிய காளையார் கோவிலை சித்தர் வடிவில் வந்து காத்த மருது பாண்டியர்கள்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மருது சீமையான காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சி...!!! சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காளையார் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் வந்தது இதனால் காளையார் கோவில் தெப்பக்குளம் ஆனைமடு விரைவில் நிறைந்தது ஏனென்றால் காளையார் கோவில் அமைந்துள்ள பகுதி பள்ளமான இடமாகும் இதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியினை நினைவு கூற விரும்புகிறேன்...!!! காளையார் கோவில் தெப்பக்குளம்                   மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின்...